இன்று கிருஷ்ண ஜெயந்தி: ஜெ. வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கண்ணன் அருளிச் செய்த கீதை வழி நடப்போம், வெல்லட்டும் அறம், வீழட்டும் பாவம் என தனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில்முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

திருவுக்கும், திருவாகிய செல்வன், தெய்வத்துக்கு அரசு, கண்ணன் என்று போற்றப்படும் கிருஷ்ணன் அவதரித்த திருநாளாம் கிருஷ்ணஜெயந்தித் திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தித் திருநாள் வாழ்த்துக்கள்.

கிருஷ்ணாவதாரம் கீர்த்தி மிக்கது. ஆழ்வார் பெருமக்களின் உள்ளம் கவர்ந்தது. அச்சுதன், அமரர் ஏறு ஆயர்தம் கொழுந்தாய் வந்த இனியவரலாற்றை இந்தியப் பெருமொழிகள் அனைத்திலும் கவிஞர் பெருமக்கள் காவியமாய் வடித்திருக்கிறார்கள்.

கடவுளின் அவதராம் என்பதோடு கிருஷ்ணனின் சிறப்பு அடங்கி விடாது. உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையைஅருளிச் செய்ததிலும், கிருஷ்ணனின் பெருமை சுடர் விடுகிறது.

கிருஷ்ணர் அருளிச் செய்த கீதை வழி நடப்போம், வெல்லட்டும் அறம், வீழட்டும் பாவம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+