திருட்டு விசிடி: ஏவி.எம். சரவணன் கோபம்
சென்னை:
எய்ட்ஸ் நோயை விட பயங்கரமான அளவுக்கு திருட்டு விசிடி பிரச்சினை வியாபித்துள்ளதாக பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார்.
திருட்டு விசிடிக்கு எதிராக நடிகர் பார்த்திபன் 4 நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம்பின்னர் திரையுலகினன் தொடர் போராட்டமாக மாற்றப்பட்டது.
இன்று 5வது நாளாக திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரதம்இருந்தனர். உண்ணாவிரதத்தை ஏவி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் சரவணன் பேசுகையில், எய்ட்ஸ் நோய் சமூகத்தை அழித்து வருவது போல, திரையுலகைதிருட்டு விசிடி பிரச்சினை அழித்து வருகிறது.
திருட்டு விசிடி காரணமாக லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
நாளை திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications