ஒலிம்பிக்ஸ்: ஊனமுற்ற வீரருக்கு ஜெ. உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏதென்ஸில் நடைபெறவுள்ள ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழக தடகளவீரர் ராஜரத்தினத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஏதென்ஸ் நகரில் நடைபெறவுள்ள 2004ம் ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் ராஜரத்தினம் கலந்துகொள்ளவுள்ளார். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்கி உதவவேண்டும் என்று முதல்வருக்கு அவர் மனு அனுப்பியிருந்தார்.

மனுவைப் பரிசீலித்த ஜெயலலிதா, ராஜரத்தினத்திற்கு ரூ. 1லட்சம் வழங்க உத்தரவிட்டார். அதற்கானகாசோலையை இன்று ராஜரத்தினத்திடம் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான முறையில் பங்கேற்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமைசேர்க்குமாறு ராஜரத்தினத்தை ஜெயலலிதா வாழ்த்தினார்.

இதற்கிடையே, தனது 3 மாத சம்பளமான ரூ. 30,000த்தை 3 திருக்கோவில்களுக்கு அன்னதானத் திட்டத்திற்காகஇன்று ஜெயலலிதா வழங்கினார்.

மே மாத சம்பளத்தை மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கும், ஜூன் மாதசம்பளத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கும், ஜூலை மாத சம்பளத்த திருப்பாதிபுலியூர் வீரஆஞ்சநேயர் கோவிலுக்கும் முதல்வர் வழங்கினார்.

இதற்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் நிர்வாக இணை ஆணையர்கள் பெற்றுக் கொண்டனர்.கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் திருக்கோவில் அன்னதானத்திட்டத்திற்கு ஜெயலலிதா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+