For Daily Alerts
Just In
சுயேச்சை எம்.எல்.ஏ அப்பாவு திடீர் கைது
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற சுயேச்சை உறுப்பினர் அப்பாவு சென்னையில் இன்று காலைதிடீரென கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்தபோது போலீஸார் அவரைத்திடீரென்று கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சாரங்கன் தலைமையில் சென்னை வந்த போலீஸார்அப்பாவுவை விசாரணைக்காக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர்அவரைக் கைது செய்வதாக அறிவித்தனர்.
நெல்லையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், எம்.எல்.ஏ. அப்பாவு தன்னை மிரட்டியதாக கொடுத்த புகாரின் பேரில்அவரைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்பாவு இன்றே நெல்லைக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளார்.
சுயேச்சையாக இருந்தாலும் இவர் அதிமுகவை மறைமுகமாக ஆதரித்து வந்தவராவார்.
Story first published: Friday, September 10, 2004, 5:30 [IST]