உமாவின் தேசியக் கொடி யாத்திரை துவக்கம்
ஹூப்ளி:
ஹூப்ளியில் போலீஸ் தடையை மீறி கொடி ஏற்றியது மற்றும் மதக் கலவரத்தைத் தூண்டியது ஆகியவழக்குகளில் கைதாகி, பின்னர் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டமத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான உமா பாரதி இன்று தனது தேசியக்கொடி யாத்திரையை தொடங்கினார்.
ஹூப்ளியில் இருந்து இந்த வேன் யாத்திரையைத் தொடங்கும் உமா பாரதி ஹரியாணாவில்ஜாலியன் வாலாபாக்கில் அதை முடிக்கவுள்ளார்.16 நாட்கள், சுமார் 3,000 கி.மீ. தூரத்துக்கு இந்தயாத்திரையை அவர் நடத்துகிறார்.
இந்த யாத்திரையை முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி இன்று காலை துவக்கி வைத்து உமாவிடம்தேசியக் கொடியை வழங்கினார்.
இதையொட்டி ஹூப்ளி நகரில் பெரும் பதற்றம் நிலவி வருவதால் அங்கு ஆயிரக்கணக்கானபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்புக்கும்கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிரத்தில் 6 நாட்கள் இந்த யாத்திரையைநடத்தும் உமா பாரதி, அப்படியே பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications