யானைக்கால் மாத்திரைக்கு 7வது உயிர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் யானைக்கால் தடுப்பு மாத்திரை சாப்பிட்ட ஒருவர் இறந்தார்.
யானைக்கால் தடுப்பு மாத்திரைகளை சமீபத்தில் தமிழக அரசு வீடு வீடாக சென்று வினியோகித்தது. திருச்சி மற்றும் பெரம்பலூரில் இந்தமாத்திரைகளை சாப்பிட்ட 6 பேர் சமீபத்தில் இறந்தனர்.
இந் நிலையில் இம் மாத்திரை சாப்பிட்ட ஒருவர் புதுக்கோட்டையில் இன்று அதிகாலை இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரசப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அந்த நபர் யானைக்கால் மாத்திரை சாப்பிட்ட பின் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
இதே மருத்துவமனையில் யானைக்கால் மாத்திரை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.












Click it and Unblock the Notifications