கோபால்: அரசுக்கு பொடா மறுஆய்வு குழு உத்தரவு
டெல்லி:
நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 14-ம் தேதிக்குள்அவருக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொடா மறுஆய்வுக் குழு உத்தரவிட்டுள்ளது. .
இந்த வழக்கில் சாட்சிகளின் பெயர் விவரங்கள், மாற்றுப் பெயர்கள், விவரங்கள் மற்றும் ஆவணங்களை அளிக்கவேண்டும் என்று மறுஆய்வுக் குழு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கோபால் மீது இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், ஆவணங்களைத் தர முடியாதுஎன்று அரசு தரப்பு வழக்கறிஞர் மாத்தூர் வாதிட்டார்.
கோபால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கோபாலின் தனிப்பட்ட சுதந்திரம் கேள்விக்குறிஆக்கப்படும் நிலையில், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த ஆவணங்கள் அவருக்கு மிகவும் அவசியம்என்று அவர் வாதிட்டார்.
இதனையடுத்து மாநில அரசுக்கு உத்தரவிடுவதற்கு தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த பொடாமறுஆய்வுக் குழு, ஆவணங்களை கோபாலிடம் வழங்க உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்குத் தொடர்பான மறுஆய்வுக் குழுவின் விசாரணை வரும் 16-ம் தேதி தொடங்கும் என்றும்அறிவித்தது.












Click it and Unblock the Notifications