7 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 37
தேனி:
7 வயதான சிறுமியைத் திருமணம் செய்தார் 37 வயதான அவளது மாமா.
தேனியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (37). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ராணி சமீபத்தில்இவரை விட்டு ஓடிவிட்டார். இதற்கு தனது தங்கையின் கணவரான அய்யாவுவே காரணம் என்று நம்பினார்விஜய்ராஜ்.
இதையடுத்து அய்யாவுவை பழி வாஙற்குவதற்காக அவரது 7 வயது மகள் அமுதமணியை (3ம் வகுப்பு படிக்கும்சிறுமி) திருமணம் செய்யத் திட்டமிட்டார். இதற்கு அவரது தங்கையும் ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, விவரம் தெரியாத அந்த 7 வயது சிறுமியின் கழுத்தில் தாலியைக் கட்டினார் விஜயராஜ்.
இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரியவந்ததையடுத்து விஜய்ராஜை கைது செய்ய விரைந்தனர். ஆனால்,போலீஸ் வரும் தகவல் அறிந்து அவரும், அவரது தங்கையும் தலைமறைவாகிவிட்டனர்.
விஜய்ராஜை விட்டு ஓடிப் போன அவரது முதல் ராணியும் மனைவியும், தனது கணவர் சிறுமியை திருமணம்செய்ததையறிந்து திரும்பி வந்துவிட்டார். அவரும் சேர்ந்து இப்போது விஜய்ராஜுடன் தலைமறைவாகவுள்ளார்.