கிருஷ்ணா.. கிருஷ்ணா: ஜெ. கதறுகிறார்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

வீராணம் திட்டத்தில் ஆயிரம் கோடியை வீணடித்துவிட்டு இப்போது கிருஷ்ணா, கிருஷ்ணா என நதி நீர் கேட்டுஆந்திராவை நோக்கி முதல்வர் ஜெயலலிதா கதறுவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சேது சமுத்திரத் திட்டம் என்னால் தான் வந்தது என்று முதல்வர் ஜெயலலிதா சொல்வது சுத்தமான பித்தலாட்டம்.1998ல் அதிமுக ஆதரவோடு வாஜ்பாய் ஆட்சி அமைந்தபோதும், 1999ல் திமுக ஆதரவில் வாஜ்பாய் ஆட்சிஅமைந்தபோதும் இந்தக் கோரிக்கையை நேஷனல் அஜெண்டாவில் சேர்க்கவே சொல்லவில்லை ஜெயலலிதா.

அதைச் சொன்னது வைகோ, நான், மாறன் ஆகியோர் தான். சரி, மன்மோகன் சிங்கையாவது சந்தித்து சேதுசமுத்திரத் திட்டத்துக்காக பேசினாரா? அதுவும் இல்லை. எதையுமே செல்லாமல் ஹிட்லர் பாணியில் நான்சொல்வதே உண்மை என்று திரும்பத் திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

விட்டால், ரூ. 1,000 கோடியில் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கூட தன்னால் தான் வந்தது என்பார்.வீராணத்தில் வெட்டியாய் ஆயிரம் கோடியைவிட்டுவிட்டு இப்போது கிருஷ்ணா, கிருஷ்ணா என்று தண்ணீர் கேட்டுகதறுகிறார். புதிய வீராணம் திட்டமே வீணானது என்று எத்தனையோ தடவை ஜெயலலிதாவுக்கு எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அதில் ஆயிரம் கோடி மக்கள் பணம் வீணாக்கப்பட்டுவிட்டது.

சந்திரபாபு நாயுடுவை பிராடு என்று சட்டசபையில் சொன்ன வாயோடு போய் தண்ணீர் கேட்டார், அவர்தரவில்லை.

தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து இப் பகுதியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். இதனால் இத் திட்டத்தைஎதிர்ப்பதை அரசு கைவிட வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியை 356யை வைத்து கலைக்கச் சொல்கிறேன். கருணாநிதி தான் வேண்டாம் என்று சொல்லிதடுக்கிறார் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+