கோபால்: அரசின் மேல் முறையீடும் தள்ளுபடி
சென்னை:
பொடா வழக்கு ஆவணங்களை நக்கீரன் கோபாலுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வழங்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொடா சட்டத்தின் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள கோபாலுக்கு, அவர் மீதான பொடா வழக்குஆவணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பொடா மறு ஆய்வுக் குழு நீதிபதி சஹார்யாஉத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி சொக்கலிங்கம் அதை நேற்று காலை தள்ளுபடி செய்தார்.
இத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு சென்னை மேல் முறையீடு செய்தது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
ஆவணங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட பொடா மறு ஆய்வுக் குழுக்கு அதிகாரம் உள்ளது. தமிழகஅரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டால் அது சட்ட விதிமுறைகளை மீறுவதாகி விடும். வழக்கு விசாரணையின்போது தங்கள் தரப்பு வாதங்களை வலுவாக வைக்க, கோபால் தரப்பினருக்கு ஆவணங்கள் வழங்கப்படவேண்டியது அவசியம்.
ஏன் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பொடா மறு ஆய்வுக் குழுதெரிவிக்கவில்லை என்பதை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் தற்போதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிக்கை இல்லாமல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய முடியாது. எனவே, கோபால் மீதான வழக்குக்குஅடிப்படையே இல்லை என்று மறு ஆய்வுக் குழு முடிவெடுத்தால் அந்த முடிவும் மாநில அரசை கட்டுப்படுத்தும்.எனவே பொடா மறு ஆய்வுக் குழு பிறப்பித்த உத்தரவுப்படி, கோபால், காமராஜ், ராமநாதன் ஆகியோருக்கு 15ம்தேதி (இன்று) பிற்பகல் இரண்டு மணிக்குள் ஆவணங்கள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications