திருப்பதி: நாளை பிரம்மோற்சவம்-20ல் கருட சேவை
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி வருகிற 24ம் தேதி வரை நடைபெறஉள்ளது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை உற்சவம் வருகிற 20ம் தேதி இரவு 9மணிக்கு நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின்போது ஏழுமலையானுக்கு ஆந்திர முதல்வர் பட்டு வஸ்திரங்கள்மற்றும் பொருட்கள் சீர்வரிசையாக வழங்குவது வழக்கம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, அப்போதைய ஆந்திர முதல்-வர் சந்திரபாபு நாயுடு கருடசேவையில்கலந்து கொள்வதற்காக திருப்பதியில் இருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றபோது மலைப்பாதையில்நக்சலைட்டுகள் வெடிகுண்டுகள் வைத்து கொல்ல முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர்தப்பினார்.
இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மலைப்பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 20-ம் தேதி நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி திருப்பதி வருகிறார்.
இந்த பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் பிரதான கோபுரம் முன்பு முதன் முறையாக டிஜிட்டல் திரையில்விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
விழாவை முன்னிட்டு கோவில் உட்புற வளாகம் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்பட்டது. இன்று மாலை 7மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந் நிகழ்ச்சியில் சுவாமியின் தளபதியாகக்கருதப்படும் விஸ்வகேசவருக்கு சிறப்பு பூஜைகள் பின்னர் 4 மாடவீதிகளிலும் திருவீதிஉலா நடைபெறும்.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழ்நாட்டில் சில முக்கிய ஊர்களில் இருந்து தமிழக அரசு 95 சிறப்புபஸ்களை திருப்பதி வரை இயக்க உள்ளது. அதேபோன்று ஆந்திர அரசும் 95 சிறப்பு பஸ்களை தமிழகத்தில்இருந்து திருமலை வரை இயக்க உள்ளது.
திருப்பதி மற்றும் திருமலையில் அரசு பஸ் நிலையங்களில் போக்குவரத்து வசதிகள் குறித்து தமிழ் மற்றும்தெலுங்கில் விவரங்கள் தெரிவிக்க 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இத் தகவலை சித்தூர் வட்டார ஆந்திர மாநில போக்குவரத்து கழக மேலாளர் நாகராஜு கூறினார்.












Click it and Unblock the Notifications