பொடா நீக்கம்: நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் உத்தரவை வெளியிட நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்தியஅமைச்சரவை கூடுகிறது.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பொடா சட்டத்தை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்க் கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றமே நடக்கவில்லை.
இதையடுத்து பொடா சட்டத்தை ரத்து செய்து உத்தரவு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்தியஅமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்காக நாளை அமைச்சரவை பிரதமர் தலைமையில்கூடுகிறது.
அதே நேரத்தில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு அதை மேலும் வலுப்படுத்தவும்முடிவு செய்யப்பட்டுள்ளது. பொடா சட்ட நீக்கத்துடன் இதற்கான உத்தரவும் வெளியிடப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications