கோட்டையில் தேசியக் கொடியை எரித்த வாலிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலை கிடைக்காத வாலிபர் ஒருவர் விரக்தியில், தேசியக் கொடியை மண்ணெண்ணை ஊற்றி எரித்தார்.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர், திடீரென தான் வைத்திருந்த தேசியக் கொடியை கீழேபோட்டு மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் பாய்ந்து சென்று தீயை அணைத்து தேசியக் கொடியைக்காப்பாற்றினர். கொடியை எரிக்க முயன்ற செல்வராஜ் பிடித்துச் சென்றனர்.
தலைமைச் செயலகத்தில் அரசிடம் பலமுறை மனு கொடுத்தும், ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்ற விரக்திகாரணமாக இந்த செயலில் தான் ஈடுபட்டதாக போலீசாரிடம் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் தேசியக் கொடி எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications