கோத்தகிரியில் கம்ப்யூட்டர் தொழிற்சாலை: கருணாநிதி
ஊட்டி:
ஊட்டி கோத்தகிரியில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தொழிற்சாலை தொடங்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறனிடம் பரிந்துரைக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
ஊட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டே கண்ணம்மா படத்துக்கு கதை, வசனம் எழுதி வரும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி இந்துஸ்தான் பிலிம்ஸ் தொழிற்சாலையை மூட விட மாட்டோம். இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் பிரதமரிடம்பேசுவார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழக்க விட மாட்டோம். சமூக அக்கறையுடன் இந்தப் பிரச்சனையைஅணுக வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வோம்.
தமிழகத்தின் நிர்வாகம் குறித்து தன்னை பிரதமர் பாராட்டியதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் விசாரித்துப் பார்த்தேன்.பிரதமர் அப்படி பாராட்டவே இல்லை என்று தெரியவந்தது.
கூட்டணியில் மாற்றம் வரும் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். அவர் யாரையோ எதிர்பார்க்கிறார் என்று மட்டும் தெரிகிறது. எங்கள்கூட்டணி தொடரும். சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தான்.
ஜெயலட்சுமி விஷயத்தில் சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும். காவல்துறை அந்த அளவுக்கு கீழே போய்விட்டது.
கோத்தகிரியில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தொழிற்சாலை தொடங்கலாம் என்று சில தொழிலதிபர்கள் யோசனை சொன்னார்கள். வேலைவாய்ப்பை உருவாக்கும் நல்ல யோசனை அது. அந்தத் துறைக்கான அமைச்சர் தயாநிதி மாறனிடம் நிச்சயம் பரிந்துரைப்பேன். அவரைகோத்தகிரிக்கும் அனுப்பி வைக்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications