கம்யூ. தொண்டர்கள் கைது: நல்லகண்ணு கண்டனம்
சென்னை:
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அக் கட்சியின் மாநிலச்செயலாளர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து அருகில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅலுவலகத்தை இந்து முன்னணியினர் சூறையாடினர்.
விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொண்டர்களை போலீஸார்கைது செய்துள்ளனர். ஆனால், இச் சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அக் கட்சியினர்மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக நல்லகண்ணு விடுத்துள்ள அறிக்கையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கட்சியினர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
மத துவேஷத்தைத் தூண்டி, மதக் கலவரத்திற்கு வித்திடுவோரை கைது செய்வதை விட்டு விட்டு கம்யூனிஸ்ட்கட்சியினர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருப்பது கேலிக்குயதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications