நாட்டாமங்கலம்: ஒரே வேட்பாளரும் மனு வாபஸ்
மதுரை:
மதுரை நாட்டாமங்கலம் தலித் கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தஒரே வேட்பாளரும் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் அங்கு இந்த முறையும் தேர்தல் நடைபெறவில்லை.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாமங்கலம், கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஆகிய 3 பஞ்சாயத்துக்களின் தலைவர்பதவிகளும் தலித் சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டவை.
ஆனால் இந்தக் கிராமங்களில் அதிகம் வசிக்கும் தேவர் சமுதாயத்தினர், தங்களுக்குத் தலைவராக தலித் வகுப்பைச்சேர்ந்தவர்கள் வரக் கூடாது என்று கூறி தேர்தலை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதனால் இந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் கடந்த பல ஆண்டுகளாக தலைவர் தேர்தல் உள்பட பஞ்சாயத்துஉறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்த முடியாத நிலை நிலவுகிறது.
ஜாதிரீதியிலான மிரட்டலையும் மீறி, வேட்பு மனு தாக்கல் செய்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெல்லும்தலித்களும் உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந் நிலையில் தற்போது இந்த 3 பஞ்சாயத்துக்களுக்கும் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
ஆனால் நாட்டாமங்கலத்தில் மட்டும் ஒரே ஒரு வேட்பாளர் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல்செய்திருந்தார். அவரது பெயர் சங்குமாயன். கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வேட்பு மனுவை அதிகாரிகள்பரிசீலித்ததில், மனு முறையாக இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் அதிகாரிகளுக்குப் புதிய குழப்பம்ஏற்பட்டது.
தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத நிலையில், உறுப்பினர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகஅறிவித்தால் சட்ட சிக்கல் ஏற்படுமே என்று அதிகாரிகள் குழம்பினர்.
இந் நிலையில் சங்கு மாயனே போட்டியிலிருந்து விலகுவதாக கூறி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
-
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கிளைமேக்ஸ் வந்தாச்சு.. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு.. பரபரக்கும் தேர்தல் களம் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்












Click it and Unblock the Notifications