நாட்டாமங்கலம்: ஒரே வேட்பாளரும் மனு வாபஸ்
மதுரை:
மதுரை நாட்டாமங்கலம் தலித் கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தஒரே வேட்பாளரும் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் அங்கு இந்த முறையும் தேர்தல் நடைபெறவில்லை.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாமங்கலம், கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஆகிய 3 பஞ்சாயத்துக்களின் தலைவர்பதவிகளும் தலித் சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டவை.
ஆனால் இந்தக் கிராமங்களில் அதிகம் வசிக்கும் தேவர் சமுதாயத்தினர், தங்களுக்குத் தலைவராக தலித் வகுப்பைச்சேர்ந்தவர்கள் வரக் கூடாது என்று கூறி தேர்தலை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதனால் இந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் கடந்த பல ஆண்டுகளாக தலைவர் தேர்தல் உள்பட பஞ்சாயத்துஉறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்த முடியாத நிலை நிலவுகிறது.
ஜாதிரீதியிலான மிரட்டலையும் மீறி, வேட்பு மனு தாக்கல் செய்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெல்லும்தலித்களும் உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந் நிலையில் தற்போது இந்த 3 பஞ்சாயத்துக்களுக்கும் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
ஆனால் நாட்டாமங்கலத்தில் மட்டும் ஒரே ஒரு வேட்பாளர் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல்செய்திருந்தார். அவரது பெயர் சங்குமாயன். கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வேட்பு மனுவை அதிகாரிகள்பரிசீலித்ததில், மனு முறையாக இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் அதிகாரிகளுக்குப் புதிய குழப்பம்ஏற்பட்டது.
தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத நிலையில், உறுப்பினர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகஅறிவித்தால் சட்ட சிக்கல் ஏற்படுமே என்று அதிகாரிகள் குழம்பினர்.
இந் நிலையில் சங்கு மாயனே போட்டியிலிருந்து விலகுவதாக கூறி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.