மண்டபத்தில் பெரும் தீவிபத்து: ரூ. 1.5 கோடி சேதம்
ராமநாதபுரம் & தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் குடியிருக்கும் குடிசைப் பகுதியில்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள மீன்பிடிப் படகுகள், சாதனங்கள் சேதமடைந்தன.
மீனவர்கள் கடலுக்குச் சென்று வரும்போது ஓய்வு எடுப்பதற்கும், மீன் பிடி சாதனங்களை வைத்துக் கொள்வதற்கும்இந்தக் குடிசைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குடிசைப் பகுதியில் இன்று திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில்கருகின. அந்த குடிசைகளுக்குள் இருந்த படகுகள், மீன்பிடி சாதனங்கள் ஆகியவை தீயில் கருகின.
சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தகுடிசைப் பகுதியில் கடந்த 6 மாதங்களில் இது 3வது தீவிபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி பள்ளியில் தீ:
இதேபோல, தூத்துக்குடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
இதில் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால்,மாணவ, மாணவியர் அப்போது பள்ளியில் இல்லை.