குஜராத்: கொத்தடிமைகளாக இருந்த 18 தமிழர்கள்
அரியலூர்:
குஜராத்தில் கொத்தடிமைகளாக இருந்த 18 தமிழர்கள், மத்திய அமைச்சர் ராஜாவின் தலையீட்டால்மீட்கப்பட்டுள்ளனர்.
அரியலூரை அடுத்த அறங்கோட்டை என்ற கிராமத்தை சேர்ந்த 18 விவசாயத் தொழிலாளர்களை சிலஏஜெண்டுகள் குஜராத்துக்கு வேலைக்கு அழைத்துச் சென்றனர். கடும் வறட்சியால் விவசாய வேலை ஏதும்இல்லாததால், அவர்களும் குஜராத்துக்குச் சென்றனர்.
கப்பலில் இருந்து தானியங்கள இறக்கும் வேலை என்று சொல்லி அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள், இவர்களைகட்டுமானப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். கட்டுமான வேலையோடு, மேலும் பல வேலைகளையும் இரவு, பகல்பார்க்காமல் கொடுத்துள்ளனர். 18 பேரையும் ஒரே அறையில் அடைத்துள்ளனர். வேலையை விட்டு விலகவும்விடாமல் கட்டாயமாக வேலை பார்க்க வைத்துள்ளனர்.
இதையடுத்து, இவர்களில் சிலர் தங்களது உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள்கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதை விளக்கி அழுதுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அறங்கோட்டைகிராமத்தினர், தங்கள் பகுதி எம்.பியான மத்திய அமைச்சர் ராஜாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதையடுத்து குஜராத் அரசைத் தொடர்பு கொண்ட ராஜா 18 பேரையும் விடுவிக்கக் கோரினார். இதைத் தொடர்ந்துஅம் மாநில போலீசார் விரைந்து சென்று 18 பேரையும் மீட்டு, நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்குஅனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications