கள்ளக் காதல்: குழந்தையைக் கொன்ற தாய்
சென்னை:
கள்ளக் காதலனை மணப்பதற்காக குழந்தையைக் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமி (20). கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த இவருக்கு ராகினி என்ற 1வயது பெண் குழந்தை இருந்தது. பெற்றோருடன் வசித்து வந்த தனலட்சுமியின் குழந்தை இரு தினங்களுக்கு முன்இறந்தது.
இந்தச் சாவில் மர்மம் இருப்பதாகவும், குழந்தையை தனலட்சுமி தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும்அவரது கணவர் பாலசுப்பிரமணியம் போலீசில் புகார் தந்தார்.
இது குறித்து இணை கமிஷ்னர் சைலேந்திர பாபு தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது. குழந்தையின் உடல்பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது, அது கழுத்தை நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, குழந்தையைக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.
மேலும் தனக்கும் ஹரிஹரன் என்ற வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், இதனால் தான் தன்னைவிட்டுகணவர் பாலசுப்பிரமணியம் பிரிந்ததாகவும் கூறியுள்ள தனலட்சுமி, காதலன் ஹரிஹரனைத் திருமணம் செய்யகுழந்தை தடையாக இருந்ததால் அதை கழுத்தை நெரித்துக் கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.
குழந்தை ராகியின் வயிற்றில் மிதித்துக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொலை செய்தாதகவும் அதிர்ச்சிகரமானவாக்குமூலம் தந்துள்ளார் தனலட்சுமி. இதையடுத்து காசநோயால் குழந்தை இறந்ததாக நாடகமாடியதாகவும்கூறியுள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனலட்சுமி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.