இஸ்லாமுக்கு மாற போவதாக தலித் கிராமம் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

ஜாதிப் பெயரை சொல்லி கிராமப் பஞ்சாயத்துத் தலைவரை திட்டிய செங்கோட்டை வளர்ச்சி அதிகாரி கருப்பையாமீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மதத்திற்குமாறப் போவதாக நெல்லை மாவட்டம் கற்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கெடு விதித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்டது கற்குடி கிராமம். முற்றிலும் தலித் மக்கள் உள்ளஇந்தக் கிராமத்திற்கு சமீபத்தில் வளர்ச்சி அதிகாரி கருப்பையா வந்திருந்தார். அப்போது பஞ்சாயத்து குறித்தஆய்வுப் பணி நடந்தது.

அந்த சமயத்தில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் சேகருக்கும், அதிகாரி கருப்பையாவுக்கும் இடையே வாய்த் தகராறுஏற்பட்டது. இதையடுத்து கருப்பையா மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் புகார் கொடுத்தனர்.

அதில், பஞ்சாயத்துத் தலைவர் சேகரை ஜாதிப் பெயரை சொல்லி அதிகாரி கருப்பையா திட்டியுள்ளார். இதுகுறித்துநடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லை.

மேலும், போலீஸாரும் அதிகாரிக்கு ஆதரவாக உள்ளனர். எங்களது கிராமப் பெண்களை மிரட்டியும்,அசிங்கமாகப் பேசியும் வருகின்றனர். எனவே அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால்கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இஸ்லாம் சமுதாயத்திற்கு மாறுவோம் என்பதைத்தெரிவித்துக் கொள்வதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்களுடன் மாவட்ட அதிகாரிகள் சமாதானம் பேசி வருகின்றனர். இதே செங்கோட்டைதாலுகாவுக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய மதமாற்றம்நடந்து இந்தியாவையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+