தமிழ் செம்மொழியானதில் மோசடி இல்லை: மணவை முஸ்தபா கருத்து
சென்னை:
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை. இந்தியாவிலேயே செம்மொழியாகஅறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான் என்று பிரபல தமிழறிஞர் மணவை முஸ்தபா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சமஸ்கிருதம், அரபி, பாலி, பாரசீகம் ஆகியவை செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இப்போது தமிழும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், செம்மொழிகள் பட்டியலில் தமிழ் மட்டுமே இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதுமொழியியலார்களிடையே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட பாலி, அரபி, சமஸ்கிருதம், பாரசீகம் ஆகியவற்றின் பட்டியலில்தமிழைச் சேர்க்காமல், அதை தனியாக இன்னொரு பிரிவின் (இரண்டாம் தர பட்டியல்) கீழ் செம்மொழியாஅறிவித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழறிஞரும் யுனெஸ்கோ கூரியர் ஆசிரியருமான மணவை முஸ்தபாவிடம் நமது செய்தியாளர்தொடர்பு கொண்டு கேட்டபோது,
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. சமஸ்கிருதம், பாலி, அரபி, பாரசீகம்போன்றவை செம்மொழிகளாக நீண்ட காலமாக கருதப்பட்டு மதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவைஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சரியாகச் சொன்னால், மத்திய அரசில் இதுவரை செம்மொழி என்ற கருத்துருவாக்கமே இல்லை.
தமிழ் மட்டுமே இப்போது முதன் முறையாக, அதிகாரப்பூர்வமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழைசெம்மொழியாக அறிவித்திருப்பதில் மோசடி எதுவும் இல்லை. இரண்டாம் தர செம்மொழியாக தமிழ்அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாது.
செம்மொழிகளுக்கான பட்டியலில்தான் தமிழும் இடம் பெற்றுள்ளது. இதில் முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல்என்ற வேறுபாடோ, பாகுபாடோ இல்லை.
உலக அளவில் உள்ள லத்தீன், சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகளின் வரிசையில்தான் தமிழும்வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார்.
இதே கருத்தையே கவியரசு வைரமுத்துவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்திய அரசால் முதன்முதலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள மொழி தமிழ் தான்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications