For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு கூடுதல் நதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக காவல்துறை நவீனமயமாக்கத்திற்கு மத்திய திட்ட கமிஷன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.

தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ரூ. 135.25 கோடி நிதியுதவி கோரி தமிழக அரசு மத்தியதிட்டக் கமிஷனுக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது.

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களும் இதுபோல பல்வேறு கோரிக்கைகளை திட்டக் கமிஷனுக்கு அனுப்பியிருந்தன.இவற்றைப் பரிசீலித்த மத்திய திட்டக் கமிஷன் மொத்தமாக ரூ. 800 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் தமிழக அரசுக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர்எஸ்.ரகுபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழக அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம், காவல்துறையினருக்கு வீடு கட்டித் தருவது, நவீன ஆயுதங்கள்வாங்குவது, நவீன சாதனங்கள், புதிய வாகனங்களை வாங்க முடியும்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் உதவ மத்திய அரசு தயாராகவே உள்ளது. இதுதொடர்பாகதமிழகம் அல்லது கர்நாடகத்திடமிருந்து உதவி கோரி கோரிக்கை வந்தால் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றார்ரகுபதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X