திண்டுக்கல் லியோனிக்கு சேலம் குட்டி சாமியார் கண்டனம்
கோவை:
இந்து மதத்தை தாக்கி பேசிய பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனிக்கு சேலம் குட்டிச் சாமியார் பரணீதரசுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் சமீபத்தில் திமுக மாநாடு நடந்தது.அதில் நடந்த பட்டிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதியைபுகழோ, புகழ் என்று திண்டுக்கல் லியோனி புகழ்ந்து பேசினார். அத்தோடு இந்து மதம் குறித்தும் சிலகருத்துக்களைக் கூறினார்.
இதற்கு சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகளின் உதவியாளர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்து மதத்தை மிகவும் கேவலப்படுத்தி பேசியுள்ளார் லியோனி. குட்டிச்சாமியாரையும் அவர் விமர்சித்துள்ளார்.
அவர் இனி எங்குமே பட்டிமன்றம் நடத்த முடியாது. அவர் கலந்து கொள்ளும் பட்டிமன்றங்களை தடுத்துநிறுத்துவோம் என்றார்.
அரசியல்வாதிகளுக்கு ஆன்மீகம் தேவை, மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று குட்டிச் சாமியாரும்கருத்து தெரிவித்துள்ளார்.