அரசியலுக்கு முழுக்கில்லை: உமா பாரதி பல்டி
மதுரா:
மூவர்ணக் கொடி யாத்திரை முடிந்ததும் அரசியலிலிருந்து விலகுவேன் என்று மதுராவில் பேசிய பாஜக மூத்ததலைவர் உமா பாரதி, அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபரீதாபாதில் நடந்த கூட்டத்தில் தான் அவ்வாறு பேசவில்லைஎன்று மறுப்பு தெரிவித்தார்.
மதுராவில் உமா பாரதி பேசியதாவது:
விழிப்புணர்வு பிரசாரங்களை விட பதவி முக்கியமானது அல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாளுக்குநாள் அரசியிலில் தரம் தாழ்ந்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் சில நாள்கள் தியானம் செய்யவுள்ளேன். அரசியல் அல்லாத ஒரு யாத்திரையைத்தொடங்கவுள்ளேன். அரசியலிலிருந்து விலகினாலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தரும் பணியைத்தொடர்ந்து செய்வேன் என்றார்.
பின்னர் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஃபரீதாபாதில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அரசியலிலிருந்து விலகுவதாக நான் கூறவில்லை. இரண்டரை ஆண்டு பாரத யாத்திரை மேற்கொள்வதற்காககட்சித் தலைமையிடம் அனுமதி மட்டுமே கேட்டேன். அதற்காக நான் அரசியலிலிருந்து விலகுவதாகக்கருதக்கூடாது என்றார்.
பாஜக விளக்கம்:
தனது யாத்திரைக்கு பா.ஜ.கவிலேயே போதிய ஆதரவு கிடைக்காததால் உமா பாரதி வருத்தமடைந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இந்த யாத்திரை மூலம் தனது தனிப்பட்ட ஆதரவைப் பெறுக்கிக் கொண்டு கட்சியின் தலைவர்பதவியைப் பிடிக்க உமா முயற்சிப்பதாக கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு கருதுகிறார்.
இதனால் உமாவின் யாத்திரைக்குச் செல்ல வேண்டாம் என கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் வாய்மொழிஉத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உமா பாரதியின் யாத்திரைக்கு கூட்டமே கூடவில்லை.
இது குறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
உமா பாரதியின் யாத்திரை முடிவடைந்து, டெல்லி வந்த பிறகு, இவ்விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன்அவர் ஆலோசனை நடத்துவார். கட்சி மீது உமா பாரதிக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அப்படி ஏதும் இருந்தால்மூத்த தலைவர்களைச் சந்திக்கும்போது தெரிவிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications