For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 ஆண்டுகளில் சேது சமுத்திரம் தயார்: பாலு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிவடைந்துவிடும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலுகூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர்,

இத் திட்டத்துக்கான அனைத்துத் துறைகளின் அனுமதிகளையும் பெறும் வேலை துரிதமாக நடந்து வருகிறது. வரும் அக்டோபரில் திட்டஅறிக்கை தயாராகிவிடும். அதன் பிறகு மிக விரைவாகவே வேலையும் தொடங்கிவிடும்.

தொடங்கப்பட்ட நாளில் இருந்து 3 வருடங்களுக்குள் பணிகளை முடித்துவிட முடிவு செய்துள்ளோம்.

இத் திட்டத்தை நிறைவேற்ற தூத்துக்குடி துறைமுகம் சேது சமுத்திரக் கழகத்தைத் தொடங்கிவிட்டது. இந்தக் கழகத்துக்கு நாட்டின் அனைத்துமுக்கிய துறைமுகங்களும், மத்திய கப்பல்துறையும் நிதியை வழங்கி பங்குதாரர்களாவர்.

இந்தத் திட்டத்தைை இலங்கை அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. அதையும் மீறி இத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசின் அனுமதியைபெற்றுள்ளது திமுக கூட்டணி.

இத் திட்டம் நிறைவேறினால் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் குறைந்துவிடும். இதனால் இத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல்கொழும்பு தடை போட்டு வந்தது. இது இந்தியாவின் 143 ஆண்டு கனவு. இது தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான திட்டம். அதை இலங்கைபுரிந்து கொள்ள வேண்டும்.

இத் திட்டத்துக்கு எதிராக மீனவர்களைத் தூண்டுவிட்டு போராட்டம் நடத்துவது சில சமூக விரோதிகள் தான். அவர்களை சமாளிப்போம்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X