இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம்: ஐநா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நாடு திரும்ப விரும்புவதாக ஐ.நா. சபைக்கான அகதிகள்மறுவாழ்வு கமிஷ்னர் லினார்ட் கொட்சலேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இனப் போரால் புலம் பெயர்ந்து இந்தியாவில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் சுமார் 1.5 லட்சம் பேரில், இதுவரை 10,000 பேர்இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். இவர்கள் நாடு திரும்ப இலங்கை அரசும் உதவியது.

ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வுத்துறையின் சார்பில் 2,500 பேர் இலங்கையில் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில்வசிக்கும் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால், அவர்கள் இலங்கைக்குத் திரும்பும் அளவுக்கு அங்கு நிலைமை இன்னும் மேம்படவில்லை.

குடி பெயர்ந்தோருக்காக இந்தியா எப்போதுமே தனது கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது. அதே நேரத்தில் குடிபெயர்ந்தோர் தொடர்பானதேசிய சட்டங்களை இந்தியா இன்னும் வரையறுக்கவில்லை என்றார்.

முன்னதாக மாநாடு ஒன்றிய பேசிய அவர்,

வளர்ச்சி அடைந்த நாடுகளில் அடைக்கலம் கோரும் நாட்டினரில் இந்தியர்கள் 6வது இடத்தில் உள்ளனர். பெரும்பாலும் காஷ்மீர், பஞ்சாப்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இவ்வாறு அடைக்கலம் கோரி விண்ணப்பித்து வருகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+