For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழுக்கு வரும் வி.பி. சிங்கின் கவிதைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & திருச்சி:

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் இந்திக் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த தமிழ்க் கவிதை நூலை திராவிடர் கழகம்வெளியிடவுள்ளது.

ஒரு துளி பூமி.. ஒரு துளி வானம் என்ற தலைப்பிலான இந்த நூல் வெளியீட்டு விழா இன்று திருச்சியில் தி.க. தலைவர் கி.வீரமணிதலைமையில் நடக்கிறது. நூலை குன்றக்குடி மடாதிபதியான பொன்னம்பல அடிகளார் வெளியிடுகிறார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளதமிழகம் வந்த சிங் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தேவையானவை தான். அதற்காக பொடா போன்ற சட்டத்தை வைத்துக் கொண்டுஅப்பாவிகளை தண்டிக்கப்படுவது தவறு. இதனால் பொடா ரத்து செய்யப்பட்டது சரிதான்.

அதே நேரத்தில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமைய வேண்டும்.

பொடவை பாஜக கொண்டு வந்தபோதே பலரும் எதிர்த்தோம். அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என அச்சம் தெரிவித்தோம். ஆனால்,அவர்கள் கேட்கவில்லை. இப்போது அச் சட்டத்தால் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளது நிஜம்.

தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதையும் பாசமும் உண்டு. இப்போது எனது கவிதைகளை திராவிடர் கழகம்தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது. இதன்மூலம் என் உள் மன ஓசைகளை தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளும் நல்ல வாய்ப்புகிடைத்துள்ளது என்றார் சிங்.

பின்னர் விமானம் மூலம் திருச்சி வந்த சிங்,கே.கே. நகரில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X