குற்றாலம் நர்சிங் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு
திருநெல்வேலி:
குற்றாலத்தில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான பிரச்சினையைஅரசு அதிகாரிகள் குழு நேரடி விசாரணை நடத்தி, தீர்த்து வைத்தது.
குற்றாலத்தில் உள்ள தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் படிக்கும்மாணவிகளிடம் பாலியல் முறைகேடுகள் நடத்தப்படுவதாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுகொடுத்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குமாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி தென்காசி கோட்டாட்சியர் ராஜசேகர், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் ஆண்டியப்பன்,துணை இயக்குநர்கள் அய்யனார், மனோகர் மற்றும் டி.எஸ்.பி. நடராஜன் ஆகியோர் அந்த நிறுவனத்திற்குச் சென்றுஅதன் இயக்குநர் கீதாவிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் குழு முன்னிலையில் நிர்வாகத்திற்கும், மாணவர்கள் சார்பில் இந்திய மாணவர் சங்கபிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இந்த நிறுவனத்தில் தொடர்ந்து படிக்கவிரும்பாத மாணவ, மாணவிகளுக்கு வரும் 15ம் தேதிக்குள் சான்றிதழையும், அவர்கள் செலுத்திய கட்டணத்தில்சேர்க்கை கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை திருப்பி அளித்துவிடுவதாகவும் கல்லூரிநிர்வாகம் உறுதி அளித்தது. அதை ஏற்றுக் கொண்டு மொத்தமுள்ள 53 மாணவ, மாணவிகளில் 50 பேர் சான்றிதழ்பெற விருப்பம் தெரிவித்தனர்.
பாலியல் புகார் மற்றும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நிறுவனத்தின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதெரிகிறது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!











Click it and Unblock the Notifications