குற்றாலம் நர்சிங் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு
திருநெல்வேலி:
குற்றாலத்தில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான பிரச்சினையைஅரசு அதிகாரிகள் குழு நேரடி விசாரணை நடத்தி, தீர்த்து வைத்தது.
குற்றாலத்தில் உள்ள தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் படிக்கும்மாணவிகளிடம் பாலியல் முறைகேடுகள் நடத்தப்படுவதாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுகொடுத்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குமாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி தென்காசி கோட்டாட்சியர் ராஜசேகர், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் ஆண்டியப்பன்,துணை இயக்குநர்கள் அய்யனார், மனோகர் மற்றும் டி.எஸ்.பி. நடராஜன் ஆகியோர் அந்த நிறுவனத்திற்குச் சென்றுஅதன் இயக்குநர் கீதாவிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் குழு முன்னிலையில் நிர்வாகத்திற்கும், மாணவர்கள் சார்பில் இந்திய மாணவர் சங்கபிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இந்த நிறுவனத்தில் தொடர்ந்து படிக்கவிரும்பாத மாணவ, மாணவிகளுக்கு வரும் 15ம் தேதிக்குள் சான்றிதழையும், அவர்கள் செலுத்திய கட்டணத்தில்சேர்க்கை கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை திருப்பி அளித்துவிடுவதாகவும் கல்லூரிநிர்வாகம் உறுதி அளித்தது. அதை ஏற்றுக் கொண்டு மொத்தமுள்ள 53 மாணவ, மாணவிகளில் 50 பேர் சான்றிதழ்பெற விருப்பம் தெரிவித்தனர்.
பாலியல் புகார் மற்றும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நிறுவனத்தின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications