For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரவு 10 மணிக்கு மேல் பார்களுக்கு தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகர நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 10 மணிக்கு மேல் பார்கள் நடத்த சென்னை காவல்துறை தடைவிதித்துள்ளது.

சென்னையில் சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல் பாரில் மது அருந்தி விட்டு வந்த நான்கு வாலிபர்கள் காரில் துரத்திமோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாகப் பலியானார்.

இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு வயது 16 என்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை நகர ஹோட்டல் பார்களுக்கு இரவில் தடை விதிக்க வேண்டும்என்ற கோரிக்கை வலுத்தது.

இந் நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 10 மணிக்கு மேல் பார்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கப்படுகிறது.பார்களில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் ஹோட்டல்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை நகரில் இரவு ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 560 இடங்களில் போலீசார் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X