For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய்: விமான நிலைய கட்டடம் இடிந்து 8 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

Dubai international airportதுபாய் விமான நிலையத்தில் கட்டப்பட்டு புதிய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள்பலியாகியுள்ளனர். சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இறந்த தொழிலாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

புதிதாக விரிவாக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மாபெரும் கூரையும் அதன் சுவர்களும் இடிந்துவிழுந்தன. அப்போது 150 தொழிலாளர்கள் அங்கு பணியில் இருந்துள்ளனர். இவர்களில் 8 பேரின் உடல்கள்இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை. 8 பேர் மட்டுமேபலியானதாக கட்டட காண்ட்ராக்டர் தெரிவித்துள்ளார். ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகஇருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிரான்ஸ் விமான நிலையத்தின் உதவியுடன், 1 கி.மீ. நீளத்துக்கு விமானத்தைப் போன்ற தோற்றத்தில் துபாய்விமான நிலையத்தின் புதிய பகுதி கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் தான் இன்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 40 பேர் வரை பலியானதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X