துபாய்: விமான நிலைய கட்டடம் இடிந்து 8 பேர் பலி
துபாய்:
துபாய் விமான நிலையத்தில் கட்டப்பட்டு புதிய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள்பலியாகியுள்ளனர். சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்த தொழிலாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
புதிதாக விரிவாக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மாபெரும் கூரையும் அதன் சுவர்களும் இடிந்துவிழுந்தன. அப்போது 150 தொழிலாளர்கள் அங்கு பணியில் இருந்துள்ளனர். இவர்களில் 8 பேரின் உடல்கள்இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை. 8 பேர் மட்டுமேபலியானதாக கட்டட காண்ட்ராக்டர் தெரிவித்துள்ளார். ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகஇருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிரான்ஸ் விமான நிலையத்தின் உதவியுடன், 1 கி.மீ. நீளத்துக்கு விமானத்தைப் போன்ற தோற்றத்தில் துபாய்விமான நிலையத்தின் புதிய பகுதி கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் தான் இன்று இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 40 பேர் வரை பலியானதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications