For Daily Alerts
Just In
கபாலீஸ்வரர் கோவிலில் ஜெ-சசி வழிபாடு
சென்னை:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சாமிகும்பிட்டார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதோஷ தினமாகும். சிவ பெருமானுக்கு உகந்த நாள். அந்த தினத்தில் சிவ வழிபாடுவிசேஷமானதாக கருதப்படுகிறது.
இந் நிலையில் நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் கபாலீஸ்வரர் கோவில் வந்தார்.பிரதோஷ பூஜைகள் முடிந்து, பக்தர்கள் கூட்டம் குறைந்த பின்னர் ஜெயலலிதா கோவிலுக்கு வந்தார்.
விநாயகர், சிங்காரவேலர், நந்தீஸ்வரர், கற்பாகம்பாள், கபாலீஸ்வரர் ஆகிய சன்னதிகளில் ஜெயலலிதாவும்,சசிகலாவும் பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர். அப்போது சிறப்புப் பூஜையும் நடந்தது.
Story first published: Monday, September 27, 2004, 5:30 [IST]