பண்ணையார் நினைவிடத்தில் பெர்னாண்டஸ்
திருச்செந்தூர்:
வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அஞ்சலிசெலுத்தினார். பண்ணையார் சாவு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடார் சமுதாயத்தினடையே மிகப் பிரபலமாக இருந்த வெங்கடேச பண்ணையார், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவேலைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு சென்னையில் போலீஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது நினைவு நாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. திருச்செந்தூர் அருகே உள்ளஅம்மன்புரம், மூலக்கரை கிராமத்தில் உள்ள பண்ணையார் நினைவிடத்தில் அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கின.
பிற்பகல் வரை பூஜைகள் தொடர்ந்தன. பின்னர் அவரது மனைவியும் திமுக எம்.பியுமான செல்வி தலைமையில்அன்னதானம் நடந்தது. பண்ணையார் தலைமை வகித்து வந்த அகில இந்திய நாடார் பேரவையைச் சேர்ந்தஏராளமானோர் மூலக்கரைக்கு வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மும்பை, பெங்களூரில் இருந்தும் பண்ணையாரின் ஆதரவாளர்களான ஆயிரக்கணக்கான இளைஞர்கள்வந்திருந்தனர். நடிகர் சரத்குமார், திருநெல்வேலி எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக வணிகர் சங்கப் பேரவைத்தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பிரமுகர்களும் பண்ணையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ்பெர்னாண்டஸும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பண்ணையார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பாக திமுகதலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இது தொடர்பான போராட்டம், கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதற்கு உதவ தேசிய ஜனநாயகக் கூட்டணிதயாராக உள்ளது என்றார் பெர்னாண்டஸ்.
பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது தான் நாடார் சமூக பிரதிநிதிகள், டெல்லி சென்று துணைப்பிரதமராக இருந்த அத்வானியைச் சந்தித்து பண்ணையார் சாவு குறித்து சிபிஐ விசாரணை கோரினர் என்பதுநினைவுகூறத்தக்கது.
ஆனால், நாடார் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்க அத்வானி முன் வரவில்லை. அப்போது பெர்னாண்டசும்இதைப் பற்றி கவலையும்படவில்லை.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications