பண்ணையார் நினைவிடத்தில் பெர்னாண்டஸ்
திருச்செந்தூர்:
வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அஞ்சலிசெலுத்தினார். பண்ணையார் சாவு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடார் சமுதாயத்தினடையே மிகப் பிரபலமாக இருந்த வெங்கடேச பண்ணையார், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவேலைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு சென்னையில் போலீஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது நினைவு நாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. திருச்செந்தூர் அருகே உள்ளஅம்மன்புரம், மூலக்கரை கிராமத்தில் உள்ள பண்ணையார் நினைவிடத்தில் அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கின.
பிற்பகல் வரை பூஜைகள் தொடர்ந்தன. பின்னர் அவரது மனைவியும் திமுக எம்.பியுமான செல்வி தலைமையில்அன்னதானம் நடந்தது. பண்ணையார் தலைமை வகித்து வந்த அகில இந்திய நாடார் பேரவையைச் சேர்ந்தஏராளமானோர் மூலக்கரைக்கு வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மும்பை, பெங்களூரில் இருந்தும் பண்ணையாரின் ஆதரவாளர்களான ஆயிரக்கணக்கான இளைஞர்கள்வந்திருந்தனர். நடிகர் சரத்குமார், திருநெல்வேலி எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக வணிகர் சங்கப் பேரவைத்தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பிரமுகர்களும் பண்ணையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ்பெர்னாண்டஸும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பண்ணையார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பாக திமுகதலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இது தொடர்பான போராட்டம், கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதற்கு உதவ தேசிய ஜனநாயகக் கூட்டணிதயாராக உள்ளது என்றார் பெர்னாண்டஸ்.
பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது தான் நாடார் சமூக பிரதிநிதிகள், டெல்லி சென்று துணைப்பிரதமராக இருந்த அத்வானியைச் சந்தித்து பண்ணையார் சாவு குறித்து சிபிஐ விசாரணை கோரினர் என்பதுநினைவுகூறத்தக்கது.
ஆனால், நாடார் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்க அத்வானி முன் வரவில்லை. அப்போது பெர்னாண்டசும்இதைப் பற்றி கவலையும்படவில்லை.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications