தாஜ்மஹாலுக்கு இன்று 350வது ஆண்டு விழா
லக்னோ:
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் 350வது ஆண்டு விழா இன்று தொடங்குகிறது.
மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜ் நினைவாக யமுனை நதிக்கரையில் தாஜ்மஹாலைநிறுவினார். இன்றுடன் தாஜ்மஹால் நிறுவப்பட்டு 350 ஆண்டுகள் ஆகின்றன.
இதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும் திருவிழா கொண்டாடப்படுகிறது. உத்திரப் பிரதேச ஆளுநர் ராஜேஸ்வர்தாஜ்மஹால் விழாவை இன்று தொடங்கி வைக்கிறார். உ.பி. முதல்வர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட முக்கியபிரமுகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.
தாஜ்மஹாலின் பின்புறம் யமுனையின் மறுகரையில் அமைந்துள்ள மேத்தாபாக் பகுதியில் இந்த விழாவைமுன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஆக்ராவின்செங்கோட்டையிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் அக்பர் காலத்தில் மொகலாய சாம்ராஜ்யத்தின்தலைநகராக விளங்கிய பதேபூர் சிக்ரியிலும் இருவார கால கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.