புலிகளுடன் தொடர்பு: தே.பா. சட்டத்தில் 4 பேர் கைது
ராமநாதபுரம்:
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இருவர் தேசிய பாதுகாப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல ராமேஸ்வரத்தில் இருந்து அகதிகளை கள்ளத்தோணிகளில் இலங்கைக்கு ஏற்றிச் சென்றதாக மேலும் இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்அடைக்கப்பட்டுள்ளனர்.
ராமஸ்வரம் புதுரோட்டைச் சேர்ந்த ராஜா (42), போஸ் (48) இருவரும் ராமேஸ்வரம் பி.எஸ்.என்.எல்.தொலைபேசி டவரை குண்டு வைத்து தகர்க்க முயன்றதாகவும், விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல், டீசலை கடத்திவந்ததாகவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட எஸ்.பி. அசோக்குமார் தாஸ் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார்.இதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியில் செல்லமுத்து அவர்களை அச் சட்டத்தில் சிறையில் அடைக்கஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந் நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கை அகதிகளை கள்ளத்தனமாக அந் நாட்டுக்கு அனுப்பிவைத்ததாகவும், புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறி தலைமன்னாரைச் சேர்ந்த அலெக்சாண்டர் (22),சசி குமார் (26) ஆகியோரை மண்டபம் போலீசார் கைது செய்தனர்.
இவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டார். இதையடுத்து இவர்களும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications