சட்ட கல்லூரி மாணவிகளிடம் ஆசிரியர்கள் சில்மிஷம்!
திருச்சி:
தங்களிடம் இரு பேராசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி திருச்சி சட்டக் கல்லூரி மாணவிகள்போராட்டம் நடத்தினர்.
திருச்சி காஜாமலையில் உள்ளது அரசு சட்டக் கல்லூரி. இங்கு ராகிங் குற்றச்சாட்டு தொடர்பாக சீனியர் மாணவர்கள்14 பேர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் ஸ்ரீதேவி, சிவகாமி ஆகியோர் இரு பேராசிரியர்கள் மீதுதிகீர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த இரு மாணவிகளையும் இரு பேராசிரியர்களும் தங்களது ஸ்டாப் ரூமுக்கு அழைத்ததாகவும், அங்கு வைத்துகன்னத்தைக் கிள்ளியும் கையைப் பிடித்து இழுத்தும் தவறாக நடந்து கொண்டதாக இந்த மாணவிகள்கூறியுள்ளனர்.
இது குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
என்னையும் சிவகாமியையும் ஸ்டாப் ரூமுக்கு அழைத்து ஆசிரியர்கள் இருவரும், நாங்கள் ஜூனியர்மாணவர்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளோம். இதை வைத்து ராகிங் செய்ததாக உங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என மிரட்டினர்.
பேசிக் கொண்டே இருந்தபோது ஒரு ஆசிரியர் என் கையைப் பிடித்து இழுத்தார். அவரது கையை நான் தட்டிவிட்டேன். உடனே என் கன்னத்தைத் தடவினார், கிள்ளினார்.
இதையடுத்து இருவரும் அறையை விட்டு வெளியேற முயன்றோம். ஆனால், வாசலில் வந்து நின்று ஆசிரியர்கள்வழி மறித்தனர். பின்னர் மாணவர், பிற மாணவிகளின் உதவியோடு தப்பி வந்தோம்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும்வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார்உதவி கமிஷ்னர் முத்தையா தலைமையில் அங்கு சென்று கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவிகளிடம்பேச்சு நடத்தினர்.
அப்போது, இந்தக் குற்றச்சாட்டு மாணவிகள் சம்பந்தப்பட்டது என்பதால் அதை அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசார் விசாரிப்பர் என முத்தையா அறிவித்தார்.
அதே போல சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 சீனியர் மாணவர்களையும் மன்னித்து மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளுமாறும் நிர்வாகத்திடம் முத்தையா கேட்டுக் கொண்டார். இதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
பேராசிரியர்கள் மீதான புகார் உண்மையானதா, அல்லது ராகிங் செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சீனியர்மாணவிகள் இருவரும், பேராசிரியர்கள் மீது பொய்யான புகாரைக் கூறியுள்ளார்களா என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவிகளிடம் ஆசிரியர்கள் செக்ஸ் சில்மிஷம் செய்வது புதிதல்ல என்றும், இந்தக் கல்லூரியில்பல ஆண்டுகளாகவே இந்தத் தொல்லை இருந்து வருவதாகவும், அரசு கடும் நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பல மாணவிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications