தென் மாவட்டங்களில் கன மழை: இடி தாக்கி 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்இடி தாக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், மேலூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்டபகுதிகளில் கன மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் இடி தாக்கி பலியானார். இதேபோல, உத்திரமேரூர் பகுதியில் விவசாயி ஒருவர் இடி தாக்கிஇறந்தார்.
இவர்கள் தவிர சிவகங்கையில் ஒரு பெண், மேலூர் மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இடிதாக்கி இறந்தனர்.
சென்னையில் இன்று மழை இல்லை. இருப்பினும் இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications