தமிழகத்தில் அதிகம் பெய்த தென்மேற்கு பருவமழை
சென்னை:
தமிழகத்தை பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த பருவ மழை இந்த ஆண்டில் அதிகமாகவே பெய்து பூமியோடுமனங்களையும் ஈரமாக்கியிருக்கிறது.
நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மீதி எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஆண்டைக்காட்டிலும் 7 சதவீதம் அதிக அளவு தென் மேற்குப் பருவமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் பருவமழை தாமதமாகத் தொடங்கியது என்றாலும், கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்துவருகிறது. தென் மேற்குப் பருவமழை செப்டம்பரோடு முடிவடையும். ஆனால் இந்த வருடம் அக்டோபர் முதல்வாரம் முழுவதுமே மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த மழை காரணமாக மேட்டூரிலிருந்து பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000கன அடியிலிருந்து 1,000 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைக்காலத்தில் குறைந்த அளவே மழையைப் பெறும் திருநெல்வேலி மாவட்டத்தில் கூட இந்தமுறை 121 சதவீதம் மழை பெய்துள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் 35 சதவீதமும், திருவள்ளூர்மாவட்டத்தில் 27 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 32 சதவீத மழை கிடைப்பது தென் மேற்குப் பருவக் காற்றின்போது தான்.
ஒரு பக்கம் மழையால் விவசாயிகள் மகிழ்ந்தாலும், இன்னொரு பக்கம் குறுவை நெல் சாகுபடியை இந்த மழைகெடுத்துவிட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி முடிவடைந்துவிட்டது. 14 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில்தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடைக்காகக் காத்திருக்கிறது. இந் நிலையில்மழை பெய்து வருவது, அறுவடை குறித்த கவலையை விவசாயிகளிடம் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் ரங்கநாதன் கூறுகையில்,
சற்று ஈரப்பதத்துடன் கூடிய நெல்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கு அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். கடந்த 1999ல் ஈரப்பதமுள்ள நெல்லை வாங்க அரசு அறிவிப்பு வெளியிட்டதுபோல தற்போதும்உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனிடம் உள்ள நவீன அரிசி ஆலையில் நெல் உலர வைக்கும் வசதிஉள்ளதால், அங்கு ஈரப்பதமுள்ள நெல்லை உலர வைத்துக் கொள்ளலாம் என்றார்.
குறுவை சாகுபடி குறித்த கவலை விவசாயிகளிடம் இருந்தாலும் சம்பா சீசன் நன்றாக இருக்கும் என்றுநம்பிக்கையுடன் உள்ளனர். சம்பா நெல் விதைப்பு அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கும்.
தென் மேற்குப் பருவ மழை வழக்கத்தை விட 7 சதவீதம் அதிகமாக பெய்திருந்தபோதிலும், தமிழகத்தில்விளைச்சலை நிர்ணயிப்பது வட கிழக்குப் பருவமழை தான். அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னரே இந்த மழைதொடங்கும். இதுவும் நல்லபடியாகப் பெய்தால் வறட்சியின் கோரப்பிடியில் இருந்து தமிழகம் வெளியில்வந்துவிடும்.












Click it and Unblock the Notifications