வெங்கையாவுக்கு கறுப்பு கொடி: 100 காங்கிரஸார் கைது
நாமக்கல்:
நாமக்கல்லில் பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற 100 காங்கிரஸாரைபோலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் குளக்கரை திடலில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய வெங்கையாநாயுடு காங்கிரஸ்கட்சி தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெங்கையா நாயுடுவுக்கு நாமக்கல் காங்கிரஸார் கறுப்பு கொடி காட்டமுடிவு செய்தனர். வெங்கையா நாயுடு வரும் வழியில் இன்று காலை 9 மணி அளவில் காங்கிரஸ் கட்சியினர்நாமக்கல் அண்ணாசிலை அருகே கறுப்பு கொடியுடன் கூடினர். காந்தியை கொன்ற பி.ஜே.பி. ஒழிக,வெங்கையாநாயுடு ஒழிக என்று கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்த போலீஸார், நளா ஓட்டலில் தங்கி இருக்கும் வெங்கையாநாயுடு வெளியே வருவதற்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், நாமக்கல் எம்.எல்.ஏவுமான டாக்டர்ஜெயக்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன் உள்பட 100 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்பு ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில்,
வெங்கையா நாயுடு நெல்லூரில் அரசுக்கு சொந்தமான, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 40 ஏக்கர்நிலத்தை அபகரித்துள்ளார். இதை கண்டித்து நேற்றே அவருக்கு கறுப்புகொடி காட்ட முடிவு செய்தோம். பின்புஅரசியல் நாகரிகம் கருதி அதனை கைவிட்டோம்.
ஆனால் வெங்கையா நாயுடு அரசியல் நாகரிகம் இன்றி சோனியாகாந்தி மற்றும் அவரது குடும்பத்தினரைதரக்குறைவாக விமர்சனம் செய்து உள்ளார். இதைக் கண்டித்து கறுப்பு கொடி காட்டினோம் என்றார்.