சினிமா: ஜெயலட்சுமியிடம் அனுமதி கோரும் ராஜன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க அவரது அனுமதியைப் பெறுவதற்காக திரைப்படத்தயாரிப்பாளர் கே.ராஜன் 6-ம் தேதி மதுரை வருகிறார்.
காவல் துறையை தற்போது கலக்கி வரும் ஜெயலட்சுமி பற்றித் திரைப்படம் தயாரிக்கப் போவதாக கே.ராஜன்அறிவித்தார். இது குறித்து தகவலறிந்த ஜெயலட்சுமி, தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னைப் பற்றி யாராவதுதிரைப்படம் தயாரித்தால் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரித்தார்.
இந் நிலையில் திரைப்படம் தயாரிப்பதற்காக ஜெயலட்சுமியிடம் அனுமதி வாங்க, வருகிற 6-ம் தேதி ராஜன் மதுரைவருகிறார். ஜெயலட்சுமியிடமும் அவரது வழக்கறிஞர்களிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இத் தகவலை ராஜன் நடத்திவரும் தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழக தென் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர்மணவாளன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications