டாகுமெண்டரியாகிறது குடந்தை பள்ளி தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளிக் கூட தீ விபத்து குறித்து டாகுமெண்டரி படம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகதேசிய பேரிடர் தடுப்பு மேலாண்மை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய பேரிடர் தடுப்பு மேலாண்மை மையத்தைச் சேர்ந்தஅதிகாரிகள் சுஜாதா சத்பதி, அஜீந்தர் வாலியா ஆகிய இரு பெண் அதிகாரிகளும் கும்பகோணம் வந்தனர்.
தீ விபத்தில் 90 குழந்தைகள் உயிரைப் பழிவாங்கிய கிருஷ்ணா பள்ளிக் கூடத்தை அவர்கள் பார்த்தனர். தீ விபத்துகுறித்த அனைத்து விவரங்களையும் அவர்கள் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், கும்பகோணத்தில் நடந்தது போன்ற தீ விபத்து எதிர்காலத்தில்எங்குமே நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு இது தொடர்பாக டாகுமெண்டரி படம் எடுத்து இந்தியா முழுவதும்ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications