கருணாநிதியும் இந்தியும்: அதிமுக தாக்கு
வேலூர்:
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகிவிட்டதால் இந்திக்கு நான் விரோதியில்லை என்று கருணாநிதி கூறஆரம்பித்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் அதிமுக ஆட்சியின் 3 ஆண்டுகால சாதனைகளை விளக்கி நடந்த பொதுக்கூட்டத்தில் வக்பு வாரியத் தலைவரும் அதிமுக சார்பில் தென் சென்னையில் போட்டியிட்டுத் தோற்றவருமான பதர்சயீத் பேசியதாவது:
தனது பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகி, இந்தியில் பேச வேண்டிய சூழலில் இருப்பதால், இந்திக்கு நான்விரோதியில்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார் கருணாநிதி.
போன தேர்தலில் 7 கட்சிகள் சேர்ந்து திமுகவை ஜெயிக்க வைத்தன. அதில் ஒன்று கழன்றாலும் அதிமுகவிடம் திமுகதோற்கும். வரும் தேர்தலுக்குள் அது தான் நடக்கப் போகிறது.
எல்லா கட்சிகளிலுமே சிறுபான்மைப் பிரிவு உள்ளது. ஆனால், திமுகவில் அது இல்லை. திமுக ஆட்சியில் தான்அதிமான முஸ்லீம்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். அதிமுக ஆட்சியில் தர்ஹாவில் கூட அன்னதானம்வழங்கி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
துணை வேந்தராக, தேர்வு வாரியத் தலைவராக முஸ்லீம்களை நியமித்தது ஜெயலலிதா தான். முஸ்லீம்கள்பாதுகாப்பாக இருப்பது ஜெயலலிதாவின் ஆட்சியில் தான். நாட்டிலேயே முதன்முதலாக மதுபான கடைகளைத்திறந்தவர் கருணாநிதி தான். ராஜாஜியும் காய்தே மில்லத்தும் எவ்வளவோ தடுத்தும் கடைகளைத் திறந்தார் என்றார்சயீத்.












Click it and Unblock the Notifications