தீவிரவாத தாக்குதல்கள்: அஸ்ஸாமில் பந்த்
கெளஹாத்தி:
நாகாலந்திலும் அஸ்ஸாமிலும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. கடந்த இரு தினங்களில்60க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்துள்ள இந்தத் தாக்குதல்களால் இரு மாநிலங்களும் இயல்பு நிலையைஇழந்து தவிக்கின்றன.
நேற்றிரவு அஸ்ஸாமின் சோந்திபூர் மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி கண்மூடித்தனமாக சுட்டதில் 6 பேர்பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அஸ்ஸாமில் நடந்த அனைத்துத் தாக்குதல்களுக்கும் உல்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மத்தியஅரசு தங்களுடன் அமைதிப் பேச்சு நடத்த முன் வர வேண்டும் என்றும், மாநில அரசுடன் பேச்சு நடத்த மாட்டோம்என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இந் நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அஸ்ஸாமில் இன்று பந்த் நடக்கிறது. இதனால்மாநிலம் முழுவதும் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள்மூடப்பட்டுள்ளன. போடோ மாணவர்கள் சங்கம் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி என்ற (என்.டி.எப்.பி) என்ற தீவிரவாத அமைப்பு தான்இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே நாகாலாந்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் இன்று அஸ்ஸாமில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த இடங்களைப் பார்வையிட்டார்.
அஸ்ஸாமிலும் பிற வட கிழக்கு மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளுக்கு வங்கதேசமும்,மியான்மாரும் முழு உதவி அளித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் அங்குள்ள தீவிரவாத முகாம்களை இந்தியாதாக்கி அழிக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் தருன்கோகோய் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகா தீவிரவாத அமைப்பினருடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை விரும்பாதபோடோ தீவிரவாதிகள், அந்தப் பேச்சுவார்த்தையைக் குலைக்கவே நாகாலாந்தில் தாக்குதல்கள் நடத்தி வருவதாகஅம் மாநில முதல்வர் நெய்பியூ ரியோ தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இன்று துப்பாக்கி குண்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.