தண்டவாளத்தில் குப்பை போட்டால் அபராதம்: லாலு
பாட்னா:
ரயில்வே வளாகங்களிலும் தண்டவாளத்திலும் குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
பாட்னாவில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்து அவர் பேசுகையில்,
ரயில்வேயில் பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ரயில்வேநிலைய வளாகத்தில் குப்பைகளை வீசுவோர், தண்டவாள பகுதிகளில் சிறுநீர் கழிப்பது, காலைக் கடன் கழிப்பதுபோன்றவற்றில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
ரயில்களில் ஓசிப்பயணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க அடிக்கடி டிக்கெட் பரிசோதனை நடத்தப்படும்.
ரிசர்வேஷன் செய்த பெட்டிகளில் மற்ற பயணிகள் அத்துமீறி ஏறுவதால் அந்த பெட்டிகளில் கூட்ட நெரிசல்ஏற்படுகிறது. இது போன்ற செயல்களுக்கு அனுமதி கிடையாது.
பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணத்தை உயர்த்தாமலேயே வருமானத்தை பெருக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. மாஃபியா சக்திகள் மூலமாக ரயில்வே ஒப்பந்தங்களை கைப்பற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு முடிவுகட்டப்பட்டு விட்டது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications