காதுகேளாதோர், வாய்பேசாதோருக்கு நவீன சுயம்வரம்
சென்னை:
வாய் பேச முடியாதோர், காது கேளாதோருக்கான நவீன சுயம்வர நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சுயம்வரா அறக்கட்டளையின் தலைவர் விஜயராஜ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
2001ம் ஆண்டு முதல் பெங்களூரில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.இதுவரை 138 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்த ஆண்டு சுயம்வர நிகழ்ச்சி வரும் டிசம்பர் 15,16,17ம் தேதிகளில் நடக்கிறது. 18 வயது முடிந்த வாய் பேசமுடியாத, காது கேளாத பெண்களும், 21 வயதான ஆண்கம் இதில் பங்கேற்கலாம். கட்டணம் ஏதும் இல்லை.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 25ம் தேதிக்குள் சி.என். விஜயராஜ், செயலாளர், சுயம்வரா டிரஸ்ட்,நம்பர் 13, 18வது கிராஸ், அல்சூர், பெங்களூர்-560008 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்குத் தெரிந்த திருமணம் ஆகாத வாய் பேச முடியாத, காது கேளாத நண்பர்கள், குடும்பத்தினருக்குவாசர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்து உதவலாம்.












Click it and Unblock the Notifications