பாஸ்போர்ட் விதிமுறைகள் தளர்வு
டெல்லி:
பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஹமது நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் உள்ள பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் 1.90 லட்சம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளன. 3 மாதங்களுக்குள் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்என்று உத்தரவிட்டிருக்கிறோம். இதற்காக பாஸ்போர்ட் வழங்கும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி புதுப்பிக்க கோரி அனுப்பப்படும் பாஸ்போர்ட்களில் குடியிருப்பு விலாசம் மாறவில்லை என்றால்,அதற்கு உடனே அனுமதி கொடுத்து விடலாம். அதை போலீஸ் விசாரணைக்கு அனுப்ப வேண்டிய அவசியம்இல்லை.
தட்கல் முறையில் வரும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு உடனே பாஸ்போர்ட் வழங்கிவிட்டு, பின்னர் இதன்மீதான போலீஸ் விசாரணை பெறப்படும்.
போலீஸ் விசாரணைக்கு பாஸ்போர்ட்டு மனுக்களை அனுப்பி பெறுவதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க, அந்தந்தமாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பாஸ்போர்ட் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேச அறிவுறுத்தப்பட்டுஇருக்கிறது.
பாஸ்போர்ட் வழங்கும் முறையை எளிதாக்குவது குறித்து ஆராய 2001ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்த குழு தனது அறிக்கையை 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசிடம் அளித்தது. அந்த குழுவின்பரிந்துரைகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட் அலுவலககட்டடங்களில் இருந்து தரகர்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அஹமதுகூறினார்.