தமிழகம் தப்பியது: ஆந்திராவில் கரை கடக்கும் புயல்
சென்னை:
இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் இன்று ஆந்திராவில் கரையைக் கடக்கிறது.
வங்க கடலின் தென்கிழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதுபுயலாக மாறி சென்னையில் இருந்து வடகிழக்கே 500 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
தமிழகத்தை பயமுறுத்திக் கொண்டிருந்த இந்தப் புயல் நேற்றிரவு மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி வேகமாகநகர்ந்தது. இன்று அதிகாலையில் ஆந்திராவில் உள்ள காக்கி நாடாவுக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே 100கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
அது மேலும் தீவிரமடைந்து இன்று பிற்பகலில் ஆந்திர மாநிலம் துனி பகுதியில் கரையை கடக்கும் என்று சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக வட ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம் மீனவர்களுக்கு புயல்எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.