திருச்சியில் தொடரும் ரெளடிகள் கொலை
திருச்சி:
திருச்சி மணிகண்டம் பகுதியில் ரெளடி கோஷ்டிகளுக்கிடையே அடிக்கடி நடக்கும் மோதலால் ரெளடிகள் வெட்டிக்கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
திருச்சி மணிகண்டம் பகுதியில் முட்டை ரவி, சேட் ஆகிய இரு ரெளடிகளும் தனித் தனி கோஷ்டியாக செயல்பட்டுவந்தனர். இரு ரெளடிக் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பதும் சகஜம்.
கடந்த ஜூலை 26ம் தேதி சேட் உள்ளிட்ட சிலர் ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது, முட்டை ரவி கோஷ்டியினர் அவர்களை வழிமறித்து வெட்டினர்.
இதில் சேட், சுரேஷ், டிங்கி ஆகியோர் கொல்லப்பட்டனர். ரெளடிகள் வெட்டியதில் டிங்கியின் தலை உடலில்இருந்து துண்டாகிப் போனது.
இந்த சம்பவம் தொடர்பாக முட்டை ரவி, மாதவன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 பேர்நீதிமன்றங்களில் சரணடைந்தனர். இவர்கள் அனைவருமே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை வழக்கு திருச்சி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் ஆஜராகி முட்டை ரவிக்கு எதிராக சாட்சியம் சொல்ல இருந்தார்சேட்டின் ஒன்றுவிட்ட தம்பியான அகஸ்டின் (33). இவரும் பெரிய ரெளடி தான்.
இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில் முட்டை ரவி கோஷ்டியினர் சிலர் அகஸ்டினையும் அவரதுநண்பர் கொளஞ்சியையும் திடீரென தாக்கினர். சரமாரியாக வெட்டினர்.
இதில் அகஸ்டின் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொளஞ்சிக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்துகொலையாளிகள் மூவரும் தப்பியோடிவிட்டனர்.
3 மாத கால இடைவெளியில் 4 ரெளடிகள் மணிகண்டம் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிமக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. திருச்சியின் ராம்ஜி நகர், நாகமங்கலம், மணிகண்டம் ஆகிய புறநகர்ப்பகுதிகள் ரெளடிக் கும்பல்களால் கொலைக் களங்களாக மாறி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications