For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மீது ஜெய்பால் ரெட்டி கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசுக்கு யோசனை சொல்லவும், நெருக்குதல் தரவும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தார்மீகரீதியில் முழுஉரிமை உண்டு என மத்திய செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறினார்.

சென்னையில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது, கருணாநிதி ஏதோ பிரதமர் போல செயல்படுவதாகமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே என்று கேட்டபோது பதிலளித்த ரெட்டி,

மத்திய அரசுக் கூட்டணியில் திமுக இடம் பெற்றுள்ளது. கூட்டணியின் மிக முக்கியமான கட்சியின் தலைவர்கருணாநிதி. அரசியல் அனுபவமும் பழுத்த நிர்வாக அனுபவமும் கொண்டவர்.

மத்திய அரசுக்கு யோசனை சொல்ல மட்டுமல்ல, கொள்கைகள் விஷயத்தில் நெருக்குதல் தரவும் அவருக்கு முழுதார்மீக உரிமை உண்டு.

ஒரு கட்சி ஆட்சி நடக்கும்போதே ஏதாவது ஒரு தலைவர் நெருக்குதல் தருவது சகஜம். இப்போது நடப்பதுகூட்டணி ஆட்சி. இதில் மக்கள் பிரச்சனைகளில் ஜனநாயகரீதியில் அரசுக்கு யோசனையும் நெருக்குதலும் ஒருகூட்டணிக் கட்சி தந்தால் அதில் என்ன தவறு?

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நேரத்துக்கு ஒன்று பேசுவார். அவருக்கென்று நிரந்தரமான கருத்தோ,நிலைப்பாடோ எப்போதும் இருந்ததில்லை என்றார் ரெட்டி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X