For Daily Alerts
Just In
ஜெர்மன் அதிபர் இந்தியா வருகை
டெல்லி:
ஜெர்மன் அதிபர் ஜெரார்ட் ஸ்ரோடர் இன்று காலை டெல்லி வந்தார்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் வரவேற்றார்.ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு இன்று ராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் ஸ்ரோடர் இரு நாட்டு உறவுகள்,சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்துவார்.
இரு நாள் பயணமாக வந்துள்ள ஸ்ரோடர், ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் சார்பில் உலக அமைதி குறித்துஉரையாற்றவுள்ளார். மேலும் குர்காவ்ன் நகரில், உலகின் முன்னணி கரன்சி உற்பத்தி செய்யும் ஜெய்ஸ்க் அண்ட்டேவ்ரிண்ட் நிறுவனத்தின் புதிய தொழில் பூங்காவை ஸ்ரோடர் திறந்து வைக்கவுள்ளார்.
Comments
Story first published: Wednesday, October 6, 2004, 5:30 [IST]