தமிழக தோல்வியால் ஆட்சி போனது: அத்வானி
புனே:
தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் இடம் பெற்ற அதிமுகவுக்குக் கிடைத்த படுதோல்வியால் தான் மத்தியில்பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது என முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிகூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி புனேயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அத்வானி கூறியதாவது:
தேசிய ஜனநாகக் கூட்டணி பல சாதனைகளைப் புரிந்தது. இதனால் மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும்ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கூட்டணி எங்களை விட 32 இடங்கள் அதிகமாகப்பிடித்தது.
இதற்குக் காரணம் தமிழகம். தமிழகத்தில் எங்கள் கூட்டணி வென்றிருந்தால் மீண்டும் ஆட்சியைப்பிடித்திருப்போம். ஆனால், கூட்டணியில் இடம் பெற்ற கட்சி (அதிமுக) படுதோல்வி அடைந்ததால் ஆட்சியைஇழந்துவிட்டோம்.
தமிழகத்தில் கிடைத்த படுதோல்வி எங்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. கூட்டணியில் இருந்த கட்சிக்கு(அதிமுக) கிடைத்த தோல்வி என்றார் அத்வானி.